எல்லோருக்கும் பிடித்த நடிகராகவும், விருப்புக்களை மட்டுமே சம்பாதித்தவராகவும், நல்ல நடிகர் எனும் அடையாளத்தோடும் உள்ளவர் இவர்தான் எனலாம். ராகவா லோரன்ஸ் !!
இவருக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் சினிமாவுலகில் உள்ளது. அந்தளவுக்கு அனைவருடனும் ஒரு அளவோடும் கண்ணியத்தோடும் பழகி நடந்து கொள்ளுகின்றவர் இவர். அண்மைக்காலமாக இவரது படங்கள் தான் அடுத்தடுத்து செம ஹிட் அடித்துள்ளன என்று சொல்லும் அளவுக்கு படங்கள் ஹிட்ஸ்.
இப்பொழுது, இன்னுமொரு அறிய சாதனையையும் நிகழ்த்த தயாராகிவிட்டார். தனது அன்பை அடையாளம் செய்யும் நோக்கமும் என்கிறார் லோரன்ஸ்.
அம்பத்தூர் எனுமிடத்தில் தனது திட்டத்துக்கான, தன் தெய்வத்துக்கான கோயிலை கட்டுவதற்கான டித்தளம் அமைக்கிறார். அதுவும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை. காரணம் சிலருக்கு மட்டுமே இப்பொழுது புரிந்திருக்கும். அதாவது, தன்னை வழக்க படாதபாடு பட்டு தனக்கு நல்ல இடத்தை வழங்கிய தனது அன்னைக்குதான் இந்த ஆலயம் என்கிறார் லோரன்ஸ்.
இதுதான் மகனால் தாய்க்கு கட்டப்படும் கோயில் வரலாற்றிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-