மகன் இறந்ததை அறிந்த பெற்றோர், மரணத்தில் மர்மம் இருப்பதாக பொலிஸில்முறைப்பாடு செய்த தைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணையில், உயிரிழந்த இளைஞரின் நண்பன் தான் மூர்க்கமாக தாக்கியதில் நண்பன் உயிரிழந்தமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
நண்பர்களுக்குள் விளையாட்டாக வீதிச் சண்டை நடக்கும் என்றும், அவ்வாறு நடந்த போட்டியின்போதே இளைஞர் உயிரிழந்தார் என்றும்மற்றைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் காணொளியும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் நண்பர்கள் இருவர் சண்டையிடுவதும் , மற்றைய நண்பர்கள் அவர்களை சூழ இருந்து ஆரவாரம் செய்வதையும் காணக்கூடியதாக உள்ளது.