அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும், வயிறு உப்பி வரும் என்று பலருக்கு தெரியும். இது எமக்கு அடிக்கடி நிகழும் ஓர் பிரச்சனையாகும். இதன் இறுதி கட்டத்திலேயே தொப்பை உண்டாகின்றது.
உடலில் வாயு உண்டாக இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பக்டீரியாவால் உடைக்கப்படும் போது உண்டாகும் வாயு. மற்றொன்று, வாய் வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்றாகும். இவை இரைப்பையில் இருந்து, ஏப்பமாக குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு தொப்பை உண்டாகிறது.
அத்துடன் சாப்பிடும் போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது, கோப்பி, டீ, ஜூஸ் போன்ற பானங்களை அருந்துவது, ஸ்ட்ரோ மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்ற நேரங்களில், நம்மையும் அறியாமல் நாம் காற்றையும் சேர்த்து விழுங்குகின்றோம். இது தொப்பை ஏற்பட முக்கிய காரணமாகும்.
Lactose Intolerance இருப்பவர்கள், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவதும் தொப்பை ஏற்பட வழிசமைக்கும்.
அத்துடன் சிறுகுடல் பகுதியில், அளவுக்கு அதிகமாகத் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா சேர்தல். ஒரு வேளை உணவு உண்டதும் அடுத்த வேளை உணவு உண்ண, அதிக இடைவெளி எடுத்துக் கொள்ளுதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமை மலம் மற்றும் சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் உடலில் தொப்பை உண்டாகுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே எமது உடலுக்கு தெங்கு விளைவிக்கும் இத்தகைய தவறான வழக்கங்களை மாற்றி, சரியான முறையில் வாழ்க்கையை கொண்டு நடத்துவது முக்கியமாகும்.