பிலிப்பைன்ஸ் நாட்டின் பசய் நகரில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மருத்துவ பொருட்களை எடுத்து செல்ல புறப்பட்டபோது விமானம் விபத்துக்குள்ளானது.
ஜப்பானில் இருக்கும் பிலிப்பைன்ஸ் மக்களை அழைத்துவருவதற்காகவும் கொரோனா தடுப்பு மருந்துகளுடன் டோக்கியோவுக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்து எரிந்ததில், பிலிப்பைன்சில் 8 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்; ஒருவர் அமெரிக்கர், மற்றொருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்.