Mahinda speaks on political revenge - வைராக்கியம் கூடாது - மகிந்தSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,384 Views
நாட்டின் நன்மைக்காக ஆட்சியாளர் சினம், குரோதம், வைராக்கியத்துடன் செயற்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
எதிர்கால சந்ததிக்காக சிறந்த வழிகளை கற்பிக்க வேண்டும்.
பௌர்ணமி தினம் போன்ற விசேட தினங்களிலும் சிறார்கள் அறநெறி பாடசாலைகளுக்கு செல்வதில்லை.
பெரியவர்கள் செயற்படும் முறைகளை அவர்கள் கடை பிடிக்கிறார்கள்.
அதேவேளை, தான் பெயருக்காக மாத்திரம் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
மகிந்தோதய என்ற பெயர் பலகையை அகற்றிவிட்டால் மாத்திரம் பொதுமக்கள் தம்மை மறந்து விட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.