2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.
தற்போது, '29' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக, விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ள நிலையில் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ‘29’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ரத்னகுமார், அவர் எழுதிய சாதாரண பேஸ்புக் போஸ்ட்டில் இருந்து உருவான கதைதான் இந்த திரைப்படமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.