இயக்குநர் K.பாக்யராஜின் மறைவு திரையுலகினரையும், இரசிகர்களையும்
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாக்யராஜின் மறைவுக்குப் பின்னர் அவர் தானமாக வழங்கிய கண்கள் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான R .பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில்
இதுகுறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,
"வணக்கம் கண்பர்களே நான் நண்பர்களே என்று சொல்வதற்குப் பதிலாக கண்பர்களே என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. நாம் மறைந்த பிறகும் நம்முடைய கண் மற்றவர்களுக்குக் கண்ணாக, பார்வையாக இருப்பது எவ்வளவு பெரிய வரம்.
அப்படிப்பட்ட நண்பர்களைத்தான் நான் கண்பர்களே என்று அழைக்கிறேன்.
இயக்குநர் பாக்யராஜின் இறப்பு எவ்வளவு பெரிய அதிர்ச்சியோ, அதற்குப் பின்னால் ஒரு சின்ன ஆனந்தம். அவருடைய கண் தானத்தின் மூலமாக ஒருவருக்கு பார்வை கிடைத்திருக்கிறது. உடல் தானமே நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையை நீட்டிப்பதற்கான சிறந்த யுக்தி. சக மனிதர்களுக்காக வாழும் இத்தகைய செயல் புத்திசாலித்தனம்." என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாக்யராஜின் இறப்புக்குப் பின்பும் அவரது கண்தானம் மூலம் ஒருவருக்கு பார்வை கிடைத்திருப்பது மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.