இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள காப்புரிமை வழக்கில் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை தொடரும் என்று டெல்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட திரைப்படங்களின் 134 பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் காப்புரிமை தொடர்பாக, தனியார் நிறுவனம் ஒன்று டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
அந்த மனுவில், சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளின் உரிமை, குறித்த நிறுவனத்துக்கே சொந்தமானது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கு இறுதி முடிவுக்கு வரும் வரை சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் இசைப் படைப்புகளை இளையராஜா பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
ஆனால் இந்த இடைக்காலத் தடையை இரத்து செய்யக் கோரி இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், தற்போது விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க முடியாது என்றும், அந்த தடை உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.