இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ ஆரபிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கணேஷ் பாபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் இயக்குநராவார். இவர் கவின் நடிப்பில் வெளியான டாடா என்ற உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் குடும்பத் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கார்த்தியின் 31வது திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது