நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 2019ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட திரைப்படத்தில் Superstar ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், "ரஜினிகாந்துக்காக ஒரு புதிய கதை தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ரஜினிகாந்தின் வரிசையில் தலைவர் 173 மற்றும் ரஜினி,கமல் இணையும் படம் உள்ளிட்ட முக்கிய படங்கள் இருப்பதால், அவை முடிந்த பிறகே தங்களது கூட்டணி மீண்டும் அமையும் என தெரிவித்துள்ளார்.