த்ரிஷா- வருண் மணியன் கல்யாணம் நின்றது என்ற செய்தி தான் கோடம்பாக்கம் முக்கிய செய்தியாக உள்ளது. ஏன் இந்த கல்யாணம் நின்றது குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு முதன்முறையாக த்ரிஷாவின் அம்மா உமா மனம் திறந்துள்ளார்.
"உண்மையில் த்ரிஷாவின் கல்யாணம் நின்றதுக்கு காரணம் வருண்மணியன் கிடையாது. கல்யாணம் ஆன பிறகும் நீ ...நடி என்று முதலில் சொல்லியவர் வருண். இந்த கல்யாணம் நின்றதில் சில குடும்ப பெரியவர்கள் சமந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் இது நாள் வரை எதுவும் சொல்லாமல் இருந்தோம், அவர்களின் மனம் பாதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
எது என்னவோ த்ரிஷா மறுபடியும் செல்வராகவன், கமல், ஜெயம் ரவி போன்ற பல பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தயவு செய்து எங்கள் மனம் புண்படும்படி எதுவும் செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நட்சத்திரங்கள் வாழ்வில் நடப்பது புதிதல்ல. ஆனாலும், எல்லோருக்கும் பிடித்த திஷா வாழ்வில் இந்த சோகச் சூறாவளி வீசியதுதான் பலருக்கும் கவலை.
-கோடம்பாக்கக் குருவி-