காவத்தை கொடகெதன்னவில் இரு பெண்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் பின்னர் அது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தீர்ப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
லியனாராச்சிகே பிரேமவதி (63) மற்றும் அவரது மகளான புஸ்பகுமாரி (23) ஆகியோரே கொலைசெய்யப்பட்டவர்கள் ஆவர்.
இக்கொலைகள் 2012 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இக் கொலைகள் தொடர்பில் நாமல் சமிந்த சில்வா, சிசிர குமார மற்றும் ஜீ. மிதில ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.