தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் கமலஹாசன் மற்றும் சரிகா அவர்களுடைய மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகனைப் போல நடிப்பிலும் பாடுவதிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார் அம்மணி.
இந்நிலையில், கமல்ஹாசனிடமிருந்து பிரிந்து சரிகா மும்பையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சாலையில் வாக்கிங் செல்லும் போது ஒரு ஆட்டோ சரிகாவின் மீது மோதியுள்ளது.உடனே அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்க, பெரிய காயங்கள் ஏதும் இல்லை. ஆனால், ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்களாம்.
ஸ்ருதி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் அக்ஷரா தான் அருகில் இருந்து இவரை பார்த்து கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-