4,044 Views
குருநாகலை ஸ்ரீ ஜோன் கொத்தலாவலகல்லூரி மாணவியான வெனுசா நிமந்தி என்ற மாணவியே கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
அவரின் தற்கொலை முடிவுக்கு கல்லூரியின்அப்போதைய அதிபர் சமன் இந்திரரத்னவே காரணமென தெரிவிக்கப்பட்டு அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது.
இந்நிலையில் சமன் இந்திரரத்னவுக்கு தற்போது பதவி உயர்வொன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் மாவத்தகம கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த தாவது: " மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு முடியும் முன்னர் இந்நியமனம் கிடைத்தமை எனது குற்றமல்ல.
இது பதவி உயர்வல்ல , நான் ஒரு பரிபாலன அதிகாரி மட்டுமே. ஒரு வருடம் நான் பணியிலிருந்து விலகியிருந்தேன், அவ்வாறு இருப்பது கணக்காய்விற்கு சிக்கல் எனவே தான் எனக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நம்புகின்றேன்.
மேலும் தற்போது விசாரணையில் இருக்கும் வழக்குக்கும் இதற்கும் தொடர்பில்லை" என்றார்.