சிறிலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு தாம் முயற்சிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த கட்சியை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில், தற்போது காவல்துறையினர் அரசியல் தேவைப்பாடுகளுக்கு அமைய செயற்பட்டு வருவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
யாருக்கும் தெரியாதவகையில் பல ராணுவ தரப்பினர் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை கொலைசெய்தார்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரித் பாராயணம் செய்வதற்கு சென்ற பல பௌத்த குருமார்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவா நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஜயநாயகம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.