இது சருமத்தின் வீக்கத்தைக் குறைத்து, எரிச்சலைத் தணிப்பதுடன், முகப்பருக்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பையும் குறைக்க உதவும்.
மேலும், சருமத்துளைகளைச் சுருக்கி முகத்திற்கு இயற்கையான பொலிவையும் தரக்கூடும்.
மேக்கப் செய்வதற்கு முன்பு ஐஸ் கட்டியைப் பயன்படுத்தினால், அது சருமத்தை இறுக்கமாக்கி மென்மையான தோற்றத்தை அளிக்க உதவுகின்றது .
அதோடு அதிக வெயில், ஒவ்வாமை அல்லது தடிப்புகளால் ஏற்படும் முக வீக்கத்தையும் ஐஸ் கட்டியைப் முகத்தில் பூசும் போது குறைவடைகின்றது.
ஆனால், ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் வைக்கக்கூடாது. துணியில் சுற்றிப் பயன்படுத்த வேண்டும்.
நீண்ட நேரம் பயன்படுத்தினால் முகத்தில் எரிச்சல் , சிவப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.