உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இளநீர் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.
காரணம் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றவும், இரத்த நாளங்களைத் தளர்த்தவும்,
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
ஆனால், இளநீர் இரத்த அழுத்த மருந்துக்கு மாற்று அல்ல. அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல. பொதுவாக 300–500 Ml வரை எடுத்துக்கொள்வது சிறந்தது.
இரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக்கொள்பவர்கள், தினமும் இளநீர் குடிப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
குறிப்பாக பொட்டாசியம் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.