21 Views
இதுபோன்ற பிரச்சினையைத் தவிர்க்க கைகளை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது முக்கியம். கைகளை கழுவிய பிறகு நல்ல மோய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சத்தான உணவுகளையும் எடுத்துக்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.
ஆனால் தோல் உரிவதுடன் அரிப்பு, சிவத்தல், வலி, வீக்கம் அல்லது புண்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதை சாதாரண வறட்சி என்று அலட்சியம் செய்ய வேண்டாம். பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சையைப் பெற தோல் மருத்துவரை அணுகுவது நல்லது