33 Views
தேங்காய்ப்பால் மற்றும் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து சில மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மேலே உருவாகும் கிரீம் போன்ற பகுதியை கூந்தலில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவலாம் . அதேபோல், இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து முடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். கற்றாழை ஜெல்லை 30–40 நிமிடங்கள் கூந்தலில் வைத்திருந்து கழுவுவது, மற்றொரு எளிய வழியாகும்.
எனினும், இயற்கை ஹேர் மாஸ்க்குகள் நிரந்தரமாக முடியை நேராக்கும் என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. இவை கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருப்பதால் நேராகத் தோன்றச் செய்யலாம். முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் சிறிய பகுதியில் பரிசோதித்து, எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்துவது நல்லது.