Ranil on Mahinda - பெண்களிடம் மகிந்த மன்னிப்பு கோரவேண்டும் - ரணில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,392 Views
முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ச குழுவினர், பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களின் செயற்பாட்டாளர்களை இன்று பிரதமர் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.
இதன் போது, யாழ்ப்பாண பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டியே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை முன்வைத்து அரசியல் செய்யும் அளவிற்கு ராஜபக்ச குழுவினர் வீழ்ச்சியடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற மாணவியின் கொலையை நாங்கள் அனைவரும் வன்மையாக கண்டித்தோம்.
இது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி வருத்தம் ஏதும் தெரிவித்தாரா? இல்லை.
அவர் சொல்கிறார் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இல்லாததன் காரணமாகவே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், பெண்களுக்கு எதிராக எத்தனை துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன.
தெற்கு பிரதேச சபைத் தலைவர் ஒருவர் 100 பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் விருந்து கொடுக்கிறார். இதேபோல பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமது பிரதேச சபையின் தலைவர்கள் மேற்கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளுக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச குழுவினர் பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் " என பிரதமர் தெரிவித்தார்.