3,080 Views
கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவனொருவர் தானும் விஷமருந்திய சம்பவம் புத்தளம் - நவகத்தேகம, முல்லேகமவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
28 வயதான பெண்ணை அவரது கணவரான 34 வயது நபரே கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் காட்டுப்பகுதிக்குள் சென்று விஷமருந்திய நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.
கணவனுக்கும் மனைவிக்கும் இருந்த குடும்ப விவகாரமே கொலைக்கான காரணமென தெரியவருகின்றது.
மேலும் குறித்த கணவர் பல்வேறு பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் சம்பந்தப்பட்டவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.