மனித உரிமை ஆணையாளரினால் கொண்டுவரப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பேரவையின் ஆணையாளர் செயிட் அல் உசைன் இலங்கையின் இறுதி போர் குறித்த அறிக்கை ஒன்றினை சபையில் நேற்று சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில். மனிதவுரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும், தமிழக சட்டசபையின் பிரேரணையும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான விடயங்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று குறித்த இரு விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்;.