கொட்டதெனியாவ பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஏற்கனவே காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த 17 வயதான மாணவர் ஒருவரும், குறித்த சிறுமியின் அயலவர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இரகசிய காவற்துறையினரின் 3 விசேடக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
அத்துடன் இது குறித்த மரபணு பரிசோதனை அறிக்கைகளும், விசாரணைக் குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.