கனடாவைச் சேர்ந்த வில்லியம் - லூசி எனும் தம்பதியினர் கடந்த 54 ஆண்டு காலமாக இல்லற வாழ்வில் மிக சந்தோஷமாக இணைந்து வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள், மனக்கசப்புகள் இருந்ததே இல்லையாம். இதற்கு ஆதாரம் இவர்களின் பிள்ளைகள்.
இப்படியிருந்த தம்பதியினருக்கு, இருவருக்குமே புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர், இந்த கசப்பான விடயம் கூட இவர்களின் அன்பிற்கு இடையூறாக இருக்கவில்லை.
ஓ அப்படியா என்று கேட்டவர்கள்.....
ஒரே வைத்தியசாலையில் ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியம்ஸின் அன்பு மனைவி லூசி இறந்துள்ளார், அதை அடுத்துவந்த 11 மணித்தியாலத்தில் வில்லியம்சும் இறந்துள்ளார்.
தன் அம்மா தனியாக இருப்பதை அப்பா எப்போதும் விரும்புவதில்லை என பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பாவும், அம்மாவும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்வார்கள் எனவும் கூறியிருந்தனர்.
இதை படிக்கும் போது இந்த காலத்தில் இப்படி ஒரு தம்பதியினரா என வியக்கின்றீர்களா? சில உண்மைகள் வியக்கவும் எம்மை நெகிழவும் வைக்கும்.