7,211 Views
பரபரப்பிற்குப் பஞ்சமே இல்லாமல் விழித்துக் கிடக்கின்றது கோடம்பாக்கம் தமிழ் சினிமா. இது என்னமோ தமிழ் சினிமா நடிகைகளின் திருமணம் பற்றிய கிசுகிசு பருவகாலம் போலும்.
மன்மதனின் காதல் லீலையில் சிக்கிய நயன், தன் முன்னணிநாயகி என்ற அந்தஸ்தும், சினிமாக் கனவுகளும் கலைந்து போகும் அளவுக்கு அவமானப்பட்டதும், அதன் பிறகு நடன இயக்குனரின் சேர்க்கையால் தன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியதும் எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில், கொஞ்சக்காலம் அமைதியாக நடிப்பில் கவனம் செலுத்தியதோடு வீழ்ந்து கிடந்த தன் மார்க்கட்டை தூக்கி நிறுத்தி, முன்னணி நாயகி என்ற அந்தஸ்தையும் நிலைநிறுத்திக் கொண்ட அம்மணிக்கு கருகிப்போன காதல் ஆசை மறுபடி துளிர்விட ஆரம்பித்திருக்கிறதாம்.
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல மறுபடியும் நயனின் காதல்செடி மன்மதனோடு தான் ஆரம்பம் என்று எல்லோரும் கிசுகிசுக்க, அவரது காதல் நெருப்பு இம்முறை பற்றிக்கொண்டது மன்மதனோடு இல்லை. மன்மதன் சிம்புவை வைத்து "போடா போடி படத்தை எடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவனோடு என்கிறார்கள் விஷயம் அறிந்த தரப்பினர்.
சிம்புவின் "போடா போடி" எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அவரது கடும் முயற்சியின் காரணமாக, தனுஷ் தயாரிக்கும் "நானும் ரவுடி தான்" படத்தை இயக்கம் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியும், நாயகியாக நயனும் நடிக்கிறார்கள். இந்தப் படப்பிடிப்பில் தான் இவர்களின் காதல் தீ பற்றிக்கொண்டதாக சொல்கிறார்கள் படக்குழுவினர்.
நயனின் இந்தக் காதல், கல்யாணத்தில் முடிவதற்கு நிறையவே வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், நயனத்தைப் போலவே விக்னேஷ் சிவனும் கேரளாவை சேர்ந்தவர் தான். அதனால் தன் பூர்விக கிராமத்துக்கே விக்னேஷ் சிவனை அழைத்துச் சென்றுள்ளாதோடு, தன் குடும்பத்தினருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தேவாலயத்தில் சிறப்பு பூஜையும் தமக்காக ஏற்பாடு செய்தாராம் நயனம்.
அத்தோடு மட்டும் நிறுத்தவில்லையாம் அம்மணி. தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த அதிசொகுசு கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளதோடு, அண்மையில் ரசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலாவும் சென்று வந்திருக்கிறார் நயன் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமான வட்டத்தினர்.
எப்படியோ, இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, சிவனை நயனம் கைப்பிடிப்பார் நிச்சயம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
*S.G.R