26,268 Views
வாவியில் குளித்த பலர் அண்மைக்காலமாக இவ்வாறான அனுபவங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஒரு பெண் தான் குளிக்கும் போது யாரோ ஒருவர் தன்னை இறுக்க அணைத்து இழுத்துக்கொண்டு போக முயற்சித்தமையை உணர்ந்தாக தெரிவித்துள்ளார்.
ஒருவர் தான் இரவு 8 மணியளவில் குளித்துவிட்டு வெளியேறியதும் நாயொன்று மிக சத்தமாக ஊளையிடும் சத்தத்தைக் கேட்ட தாகவும் அச்சத்தம் மிக அசாதாரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் நாய்களின் உருவங்களை கண்டுள்ளதாகவும் , பின்னர் அவை திடீரென மறைந்து போனதையும் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் குறித்த வாவியில் , எவ்வித உயிர் பலியும் ஏற்படவில்லையெனவும் , இதன் காரணமாகவே இத்தகைய அனுபவங்கள் தமக்கு இடம்பெறுவதாகவும் பிரதேசவாசிகள் நம்புகின்றனர்.
இவ்விடயம் குறித்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸார் இதற்காக விசேட பிரித் ஓதும் வைபவமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிட த்தக்கது.