3,205 Views
இக் கொலையை மேற்கொண்டுள்ள சிறுவர்களின் வயது 11 முதல் 15 க்கு இடைப்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனைக் கொலை செய்து , அவனை குழியொன்றுக்குள் புதைத்துமுள்ளனர்.
கிறிஸ்டோபர் ரேமுண்டோ மார்கஸ் மோரா என்ற குறித்த சிறுவன் 13 வயதான 2 பெண்கள் , 11 வயதான சிறுவன் மற்றும் 15 வயதான இரண்டு சிறுவர்களினாலேயே கொலைசெய்யப்பட்டுள்ளான்.
விளையாடுவதற்கு வருமாறு கூறி அழைத்துச் செல்லப்பட்டுள்ள கிறிஸ்டோபர் ரேமுண்டோ மார்கஸ் மோரா பின்னர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பால் அடித்து , அதனாலேயே கழுத்தை நெரித்து ,பின்னல் கல்லால் தாக்கியே இக்கொலையை புரிந்துள்ளனர். மேலும் உயிரிழந்த பின்னர் அவனின் முதுகில் கத்தியாலும் குத்தியுள்ளனர்.
குற்றவாளிகள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.