கெஹலியவுக்கு பிணை
Keheliya get bail - கெஹலியவுக்கு பிணைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
முன்னாள் அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹலிய றம்புக்வெல உள்ளிட்ட மூன்று பேருக்கு பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மோசடி இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு வந்ததாக கூறப்படும் நிதியில் 600 குழாய்களை கொள்வனவு செய்ததன் ஊடாக, அரசாங்கத்திற்கு 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்படுத்தினார்.
இவ்வாறு குற்றச்சுமத்தி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிட்டக்கப்பட்டது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கெஹலிய றம்புக்வெல, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ருபசிங்க மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் சந்ரபால லியனகே ஆகியோருக்கே இவ்வாறு பிணை வழக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தலா 50 ஆயிரம் ரொக்கப்பிணையிலும், 25 லட்சம் ரூபா சரீர பிணையிலும் செய்ய நீதவான் அனுமதித்தார்.
அத்துடன், விமல் ருபசிங்க மற்றும் சந்ரபால லியனகே ஆகியோரின் கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.