சர்ச்சையை கிளப்பிய ஷாருக்கின் நடனம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சியொன்றில், பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர், இவர்களோடு அதன் விளம்பர தூதுவரான பிரபல நடிகர் ஷாருக்கானும் கலந்துகொண்டிருந்தார். அருமையாக நடந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சி மேடையில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேரிக்கொண்டிருந்தன.
மேடையில் நடனமாட ஷாருக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, சில ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடிய அவர், திடீரென மேடையின் மேலே அரசியல் பிரமுகர்களுக்கு பந்தோபஸ்துக்கு நின்றுகொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை தூக்கி நடனமாடியிருக்கிறார், இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிலர், காவல் துறை சீருடையின் கண்ணியத்தை காப்பாற்ற மறந்த குற்றத்திற்காக அந்த பெண் போலீஸ் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர், ஆனால் மேலும் சிலர், கலையை கலைக் கண்ணோடு காண வேண்டும், மேடை நிகழ்சியொன்றில் நடைபெற்ற இந்த சம்பவத்தை யாரும் பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
ஷாருக் தனியாகவே நடனமாடியிருந்தால், இந்த பிரச்சினையே வந்திருக்காது.