2,384 Views
திலோகி மற்றும் திவங்கி என்று பெயரிடப்பட்ட அக் குழந்தைகளில் திவங்கி பலவீனப்பட்ட குழந்தையாக இருந்ததால் அவரை சத்திரசிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியிருந்தனர்.
பின்னர் திலோகியை மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்தனர்.
தற்போது திலோகி ஆரோக்கியமாக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க தாயாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் , இயந்திரத்தின் உதவியின்றி தானாக சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குழந்தைகளை பிரித்தெடுக்கும் முதல் சத்திர சிகிச்சை இதுவெனவும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட 3 ஆவது இத்தகைய சத்திரசிகிச்சையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அக்மீமன- குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரான பிரதீப் குமார மற்றும் ஆசா தமயந்தி தம்பதியினருக்கு கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இக்குழந்தைகள் பிறந்திருந்தன.