8,516 Views
ஜெயராஜ் விசித்திரா என்ற 14 வயது சிறுமியே அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் சிறுமி தற்கொலை செய்துள்ளமை மரண விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமியின் தற்கொலை முடிவுக்கான காரணம் சிறுமியின் தாயாரே என தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியின் தாயார் நான்கு வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றிருந்துள்ளார்.
சிறுமியின் தந்தையின் விருப்பத்தக்கு மாறாகவே தாயார் வெளிநாடுக்கு சென்றுள்ளார்.
மேலும் தாயார் வெளிநாட்டுக்கு செல்வதை சிறுமியும் விரும்பவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தாயார் வெளிநாடு சென்றிருந்த காலப்பகுதியில் சிறுமி தனிமையிலேயே அதிக பொழுதைக் கழித்து வந்ததாகவும் , பாசத்துக்காக அவர் ஏங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வெளிநாடு சென்று திரும்பியிருந்த தாயார் மீண்டும் வெளிநாடு செல்ல ஆயத்தமானமை சிறுமியை மீண்டும் உளவியல் ரீதியாக பாதிக்க தொடங்கியதாகவும் இதன் விளைவே தற்கொலையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.