கொட்டாஞ்சேனை - ஜம்பட்டா வீதியில் நேற்று இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
கைதான இரண்டு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பகையின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடபுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.