3,240 Views
இச் சம்பவத்தின் காணொளியும் இணையத்தில் வெளியாகியது.
கொழும்பு - தெனியாய வீதியில் வவுலகல பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தின் போது மனுஷ நாணயக்காரவும் குறித்த வா ன த்தில் இருந்துள்ளார்.
அவரது வாகனம் அகுரஸ்ஸையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதன்போது மோசமாக காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
காலி, யக்கலமுல்லையைச் சேர்ந்த 76 வயதான ரனேபுர ஹேவகே குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன் பின்னர் மனுஷ நாணயக்காரவின் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நட த்திய மனுஷ நாணயக்கார இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர் இச்சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு காணொளியை பார்வையிடவும்: