திருகோணமலையில் நபரொருவர் தான் கள்ளத்தொடர்பை பேணிவந்த பெண்ணை தீ மூட்டி கொலை செய்ய முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 3 மாதங்களாக அந்நபர் குறித்த பெண்ணுடன் அவரது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் திகதி இரவு அப் பெண் தீ மூட்டிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அயலவர்களும் , குறித்த நபரும் இணைந்து தீயை அணைத்து , வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர். அவர் தனதுக்கு தானே தீ மூட்டிக்கொண்டதாக அந்நபர் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேச முடியாமல் இருந்த அப் பெண் கடந்த 28 ஆம் திகதி அநபர் தனக்கு தீயை மூட்டியதை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 48 வயதான குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.