பொலனறுவையில் உள்ள சிவன் ஆலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது, புராதன காலத்தில் அந்த பகுதியில் இரும்பும் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் கலாநிதி ப்ரிசாந்த குணவர்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அம்பாறை - உகன - ரஜகலதென்ன புராதன பூமியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, ஆயிரத்து 100 வருடங்கள் பழைமையான கல்வெட்டொன்றில், நாட்டிய சாலைக்கான அனுமதிபத்திரங்களை வழங்கும் நபர் ஒருவர் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
படங்கள் : ரொஷான் துஷார