10,742 Views
ஹம்பாந்தோட்டையில் வீடொன்றுக்குள் புகுந்த நபரொருவர் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி 13 வயதானவரெனவும் அவரது வீட்டில் நிரந்தரமான கதவுகள் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்துள்ள மர்ம நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் அவரை தொட்ட வேளையில் சிறுமி கண்விழித்து அலறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோரும் நித்திரையில் இருந்து எழுந்துள்ளனர்.
பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். எனினும் சிறுமியின் தந்தை அவரை துரத்தியுள்ளார்.
அந்நபர் அவ்விடத்துக்கு நன்கு பரீட்சயமானவர் போல் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் வீட்டு வாசலில் செருப்பையும் விட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.