4,675 Views
அனுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் விசேட தேவையுடைய நபரொருவரை போக்குவரத்து பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று முன் தினம் காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட தேவையுடைய குறித்த நபர் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி கைதுசெய்ய சென்ற வேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.