10,625 Views
வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
அவர் விபத்தில் உயிரிழவிக்கவில்லை மாறாக கொலைசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோண்டி எடுக்கப்பட்ட அவரது சடலம் பின்னர் மீண்டும் புதைக்கப்பட்டது.
பின்னர் பரிசோதனைகளின் பொருட்டு பெறப்பட்ட அவரது உடல் பாகங்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது கையடக்கதொலைபேசியின் நினைவகப்பகுதியில் சேமிக்கப்பட்ட படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
கையடக்கத்தொலைபேசி மீண்டும் செயற்படு நிலைக்கு கொண்டுவர முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்த போதிலும் நினைவகப் பகுதியிலிருந்து தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது