16,086 Views
சென்னையில் கடும் மழை பெய்த 24–ஆம் திகதி நள்ளிரவு நடிகை ஹன்சிகா நடுவீதியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
" கடந்த 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அப்போது கொட்டித் தீர்த்த மழையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இரவு 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் ஹோட்டலுக்கு புறப்பட்டேன். கார் மெதுவாக நகர்ந்தது.
இரவு 11.30 ஆன போதும் எனது கார் விமான நிலைய வீதியிலேயே நின்றது. அந்த அளவு போக்குவரத்து நெருக்கடி. எனக்கு பிடித்தமான சினிமாவை பார்க்கத் தொடங்கினேன். கார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட செல்லவில்லை. நேரம் நள்ளிரவை கடந்து விட்டது. காரிலேயே இருந்ததால் கால்கள் வலிக்கத் தொடங்கின. இனியும் காத்திருக்க விரும்பாத நான், காரில் இருந்து இறங்கி அருகில் உள்ள ஹோட்டலை தேடி மழையில் நனைத்தபடியே ரோட்டில் நடந்து சென்றேன்.
என் உடல் சேரும் சகதியுமாக ஆகி விட்டது. அதை கண்டு கொள்ளாமல் ஹோட்டலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கிய நிலையிலும், சென்னை மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர்.சிலர் என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். என் நிலைமையை புரிந்து கொண்டு நான் ஹோட்டலுக்கு செல்ல எனக்கு வழிகாட்டி உதவி செய்தனர். அந்த நள்ளிரவிலும் நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன்
சென்னை எனது வீடு என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது. என்னை தங்களில் ஒருத்தியாக நினைத்து மக்கள் என்மீது காட்டிய அன்பையும், பாசத்தையும் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். நகரமே வெள்ளத்தில் தவித்தாலும் பிறருக்கு உதவி செய்யும் மனதை அறிந்தேன். எனக்கு சென்னை மக்கள் இருக்கிறார்கள். என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் நானும் அவர்களுக்காக இருக்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அன்பும், பிரார்த்தனையும் என்று கூறியுள்ளார்.
நன்றி: இந்திய ஊடகம்