Vass' wife in hunger strike - கணவனுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போகிறார் வாஸின் மனைவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,876 Views
மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட தமது கணவர் மற்றும் புதல்வர் உள்ளிட்ட 6 பேருக்காக சாகும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி பெரேரா தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பு தொடர்பாக தாம் எதிர்வரும் நாட்களில் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமை கடத்திக் கொலை செய்தமை தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்ட வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
மூவர் கொண்ட விசேட நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை காவல்துறை வரலாற்றில் முன்னாள் பிரதி காவல்துறை மாஅதிபர் ஒருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.