காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, யாழ்ப்பாணத்தில் தங்களின் விசாரணைகளை இரண்டாவது தினமாக இன்று நடத்தவுள்ளது.
இன்று யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மக்களுக்கான விசாரணைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்றையதினம் நல்லூர் பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த மக்களுக்கான விசாரணைகள் நடைபெற்றிருந்தன.
இதன்போது 235 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 130 பேர் சாட்சி வழங்கி இருந்தனர். புதிதாக 44 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.