கவர்ச்சியை தமிழுக்கு குறைத்தும், தெலுங்கில் அள்ளி விதைத்தும் உலா வருகின்றவர் அஞ்சலி. சர்ச்சைகளின் தலைவி என்கிற அளவில் அம்மணிக்கும் பிரச்சினைகளுக்கும் அவ்வளவு பொருத்தம்.
அடிக்கடி ஏதாவது செய்து மாட்டிக் கொள்வது அல்லது கிசுகிசுக்கப்படுவது வழமையானதாக மாறிவிட்டது. சரி ! இப்பொழுது அஞ்சலி, தனக்கு வரும் தேவையற்ற நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தானே தருவதற்காக ஒரு முடிவுக்கு வந்து, பொது வலைத்தளப் பகுதிக்கு வந்துள்ளார்.
அதாவது ட்விட்டர் வலைத்தளத்துக்கு அம்மணியும் அடியெடுத்து வைத்துள்ளார். யாராவது தன்னைப் பற்றி வதந்திகள் மற்றும் தவறான செய்திகளை பரப்பினால், அது தொடர்பாக தானே தன்னிலை விளக்கம் தருவதற்காகவே இந்த ட்விட்டர் தரிசனம் என அஞ்சலி அறிக்கை ஒன்றோடுதான் வந்துள்ளார்.
தனது கணக்கில், தன் புகைப்படங்கள் மற்றும் தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் பற்றிய குறிப்புக்களையும் இட ஆரம்பித்துள்ளார் இந்த அங்காடித்தெரு அஞ்சலி பாப்பா.
கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி -