துறு துறு விழிகள் படபடவென சிறகடிக்க, அழகிய இள மானொன்று சின்னத்திரை நாடகங்களிலும், ஏனைய நிகழ்ச்சிகளிலும் கலந்து களை கட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுதே பலரும் சொன்னார்கள், இந்தப் பொண்ணு நல்லாதானே இருக்கு. நடிக்க வரலாமேன்னு !
அப்போ சொன்ன அந்த வாய் முகூர்த்தம் , இப்பொழுது பலித்திருக்கிறது. அவர்தான் ஆனந்தி. இது யாரடா புதுசா ஒரு ஆனந்தின்னு நீங்க யோசிக்கலாம். அவர்தான், மீகாமன் படத்தின் ஹன்ஷிகாவின் தோழியாக வருவாரே ! அவர்தான் இவர், அதாவது நான் சொல்லும் ஆனந்தி.
என்னம்மா ஒரே குழப்பமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? சரி, இனி குழம்பாதீங்க. கயல் படத்தில் வர்ற ஆனந்தி போலவே, இவரும் நல்ல கலரும் எல்லோரையும் கவரும் அழகும் கொண்டு உலா வருகிறார். மீகாமன் மூலமாக தனது சினிமா வாழ்வை ஆரம்பித்துள்ள இந்த சின்னத்திரை ஆனந்தி, இனி தொடர்களில் நடிப்பதில்லை. சினிமாவில் மட்டுமே முழுக் கவனமும் என்கிறார்.
அந்த ஆனந்தி இருக்கும்போதே, அதே பெயரோடு வர்றீங்கலேன்னா, நடிப்பில் வித்தியாசம் இருக்கும். கவலைப்பாடாதீங்கன்னு நமக்கே ஆறுதல் சொல்றாங்க. அப்போ பாருங்களேன் ....!!
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-