பீட்ஸா படத்தின் மூலமாக பிரபலமாகி பல வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, இப்பொழுது 6 புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
யாருக்கும் அமையாத அமோக வரவேற்பு இவருக்கு நம்ம இரசிகர்களால் வழங்கப்பட்டுள்ளமை இவரின் நடிப்புக்கு கிடைத்த விருது என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போ விஷயம் என்னன்னா, சூதுகவ்வும் படத்தில் ஒரு இளம்பெண்ணை காரில் விஜய்சேதுபதி கடத்த முயற்சிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் சேதுபதிக்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
இப்போதுள்ள நடிகைகளில், யாரை நீங்கள் கடத்துவீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு சலனமும் இல்லாமல் உடனே "நயன்தாரா" என்றார் விஜய் சேதுபதி.
இவர் சட்டென்று மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்பவரென்றும் பெயர் எடுத்திருக்கிறார்.
ஓஹோ! கதை அப்பிடி போகுதா என்றவர்களுக்கு எல்லாம் பதிலையும் அவரே வழங்கியிருக்கிறார்.
"நயன்தாரா நல்ல நடிகை. திறமையாக நடிக்க கூடியவர். அவரோடு ஜோடியாக நடிக்க எனக்கும் ஆர்வமுள்ளது" என்று , கதை கட்ட காத்திருந்தவர்களுக்கு அவரே முற்றுப்புள்ளியிட்டிருக்கிறார்.
பரவால்லை , நீங்க தேறிட்டீங்க சேதுபதி ப்பாஹ் !!!!