Brain-damaged India nurse dies 42 years after rape - அருணா ஷன்பேக்கை தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,763 Views
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு உணர்வற்றநிலையில் இருந்த மருத்துவ தாதி அருணா ஷன்பேக் ஒருவர் 42 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மரணமானார். கடந்த 1973ஆம் ஆண்டு மும்பாயில் உள்ள மருத்துவமனையின் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவரால், அதே மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ தாதி ஒருவர் கொடூரமான வகையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது வன்புணர்வில் ஈடுபட்ட சுத்திகரிப்பு தொழிலாளி, உலோகத்தினாலான சங்கிலியினால் தாதியின் கழுத்தை இறுக்கி கட்டிய நிலையில் விட்டுச் சென்றார்.
இருப்பினும், தாதி, உயிருக்கு போராடியநிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் நடைபெற்று 6 நாட்களுக்குப் பின்னர், தாதிக்கு கடுமையான நிமோனியா நோய் ஏற்பட்டது.
இந்த நோய் தாக்குதலையடுத்து அவரது மூளை செயலிழந்ததுடன், பக்கவாதமும் ஏற்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக மருத்துவ மனையில் வைத்து பராமரிக்கப்பட்டார்.
உயிர் வாழ்வதற்காக இவருக்கு பலவந்தமாக நாள் ஒன்றிற்கு இரண்டுமுறை உணவும் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த கால கட்டத்தில் அவரின் நிலையை கவனத்தில் கொண்டு உணவளிப்பதை நிறுத்தி கருணைக்கொலையில் ஈடுபடுவதற்கான நீதிமன்றத்தின் அனுமதியும் கோரப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் தேக நிலையினை நன்கு அறிந்த போதிலும், இந்திய உயர் நீதிமன்றம், கருணைக் கொலையை முற்றாக நிராகரித்திருந்தது.
இதேவேளை, தாதி தொடர்பான சம்பவத்தையும், பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கை சரித்திரத்தையும் நூலாக எழுதிய ஊடகவியலாளரும், நூலாசிரியருமான பின்கி விராணி, தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வருடா வருடம் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம் காரணமாக அவர் மருத்துவமனையில் பெரும் சித்திரவதைக்கு உள்ளாகியது குறித்து அவர் தமது நூலில் விபரித்துள்ளார்.
இப்படியான நோயாளர்களின் நிலையை கவனத்தில் கொண்டு கருணை கொலையினை இந்தியா அனுமதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக அந்த நூலில் பின்கி விராணி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் குறித்து டுவிட்டர் இணைய தளத்தின் ஊடாக ஏராளமானவர்கள், நூலாசிரியரின் கருத்தினை ஏற்றுக்கொண்டு தகவல் வெளியிட்டுள்ளனர்.
மருத்துவ தாதி, அருணா ஷன்பேக்கினை சித்திரவதையின்றி மரணிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.