ஆட்கொல்லி நோயான "இபோலா " இப்போது இலங்கையிலும்....?????
ஆபிரிக்காவின் கொங்கோ நாட்டின் இபோலா ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கபட்ட இந்த வைரஸ் மிகப்பெரும் பயங்கர ஆட்கொல்லி நோயாக நோக்கபடுகின்றது.

மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தையே பெரும் நெருக்கடிக்குள் இந்த நோய் தாக்கமும் அதன் விளைவுகளும் சிக்க வைத்துள்ளன.
இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதன் தாக்கம் மிக வேகமாக பரவி வருகின்றது.
லைபீரியாவில் இந்த நோய் தாக்கம் காரணாமாக இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர்.
லைபீரியா அரசின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்காவினால் அனுப்பபட்ட "இசற்மாப்" என்ற மருந்து இந்த நோயாளிகளுக்கு பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை லைபீரியாவில் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வைத்திய சாலையினுள் புகுந்த 17 பேர் இபோலா நோயாளிகளின் ரத்த கறை படிந்த படுக்கை விரிப்புக்களை திருடி சென்றுள்ளனர்.
அவர்களை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் ஏதாவது சதிச் செயலா என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே ஆசிய நாடுகளான இந்தியாவை அடுத்து உலகையே இப்போது ஆட்கொண்டிருக்கும் "இபோலா " வைரஸ் இலங்கையிலும் ஒருவரிடம் இனம்காணப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் சுகாதார அமைச்சு இதுவரை அப்படி யாரும் அகப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதேநேரம், எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
வருமுன் காப்போம்; அவதானமாக இருப்போம்.