இந்தத் திட்டத்தில் சுற்றுப்பாதை விண்கலம், தரையிறங்கி, நிலவில் ஊர்ந்து செல்லும் ஊர்தி மற்றும் இருள் சூழ்ந்த பள்ளங்களுக்குள் குதித்துச் சென்று ஆய்வு செய்யக்கூடிய பிரத்யேக ‘குதிக்கும் ரோபோ’ போன்ற பல்வேறு சாதனங்கள் அடங்கியுள்ளன.
நிலவில் எதிர்காலத்தில் மனிதர்கள் தங்குவதற்கான ஆராய்ச்சி தளங்களை அமைப்பதற்கும், அங்கு கிடைக்கும் நீரைக் குடிநீராகவும், ஏவூர்திகளுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் oxygenஐ பிரித்தெடுக்கவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும்.
மேலும், இந்த விண்கலத்தில் பல்வேறு நாடுகளின் அறிவியல் ஆய்வு கருவிகளும் இணைக்கப்பட்டு, கூட்டு முயற்சியாகச் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.