3,550 Views
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது, இந்திய தேசிய அணியில் இடம்பெறாத இளம் வீரர்கள், பல்வேறுபட்ட நாடுகளின் நட்சத்திர வீரர்களுடனும் தமது நாட்டு தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுடனும் பழகுவதற்கும் அவர்களுடன் இணைந்து விளையாடுவதற்கும் ஒரு களமாக அமைந்துள்ளது எனலாம்.
இந்த இளம் வீரர்கள் இந்த ஐ.பி.எல் போட்டிகளில் இவ்வாறான முன்னணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதன் மூலம், அவர்களிடம் இருந்து கிரிக்கெட் நுட்பங்களை நிறையவே கற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் தேசிய அணியின் தேர்வாளர்களை தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதற்கும் கூட ஒரு களமாக வைத்துள்ளது என்றே சொல்லலாம். அதேவேளை பல நாடுகளின் நட்சத்திர வீரர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பாகவும் கூட ஐ.பி,எல் போட்டிகள் அமைத்துள்ளன. இதை நிருபிப்பது போல அமைந்துள்ளது
கெய்ல் மற்றும் இந்திய இளம்வீரர் சர்பராஸ் கான் ஆகியோர் இடையே உண்டான நட்பு.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 21 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து அனைவரையும் வைத்தவர் தான் பெங்களூர் றோயல் சாலஞ்சர்ஸ் அணியில் இடம்பிடித்த 17 வயது இளம் வீரர் சர்பராஸ் கான். இந்த போட்டியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் பிரபலமாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரே, மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரவீரர் கிரிஷ் கெய்ல் இன் நண்பராக மாறியுள்ளார்.
இந்தநிலையில், தமக்கிடையே உள்ள அந்த நட்புப் பற்றி கூறும் சர்பராஸ் கான் ‘‘ஜமைக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தனது திருமணத்திற்கு வரும்படி கெய்ல் என்னை அழைத்தார். ஆனால், ஜமைக்கா செல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை.அவர் என்னை 'அகா மிஸ்டர் பாண்டா (Aka Mr Panda)’ என்றுதான் அழைப்பார். நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதில் அக்கறை எடுத்துக்கொள்வார். அவர் என்னை ஸ்வீட்ஸ் சாப்பிட அனுமதிக்கமாட்டார். சில சமயம் எனக்கு உணவு பரிமாறும்போது இரண்டு துண்டு சிக்கனுக்கு மேல் அனுமதிக்கமாட்டார்’’. என தமக்கிடையே உண்டான பாசப்பிணைப்பை கூறிக் கூறியே மனம் நெகிழ்கின்றாராம்.
*S. G. R