இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்ற முடிவை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மக்கள் ஆணைக்கு இணங்க அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கும் , கட்சிக்காக உழைத்தோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.