4,838 Views
நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த அம்மூவரும் அங்கிருந்த சகோதரிகள் இருவருடன் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் இருந்த குறித்த சகோதரிகள் இருவரின் அறைக்குள் அம் மூவரும் புகுந்துள்ளனர்.
அவர்கள் வீட்டின் மேல் ரகசியமான முறையில் ஏறுவதை அயலவர்கள் கண்டு பொலிற்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் , தாய் , தந்தையுடன் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் கதவை திறக்காததனால் , பொலிஸார் பலவந்தமாக கதவை திறந்துள்ளனர். இதன்போது அச் சகோதரிகள் மற்றும் அந்த இளைஞர்கள் மூவர் உட்பட அனைவரும் கஞ்சா புகைப்பதையும், மோசமான வித ததில் நடந்துகொண்டிருந்ததமையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.
பின்னர் அவ்விளைஞர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த சகோதரிகளின் அனுமதியுடனேயே அங்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.